பேசப்படாத நாயகர்களின் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது: அண்ணாமலை

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை-'பிரதமர் நரேந்திர மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி, பேசப்படாத நாயகர்கள் பலருடைய வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் வானொலியில் பேசும், 'மனதின் குரல்' 99வது நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில், அக்கட்சியின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'பிரதமர் நரேந்திர மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி, பேசப்படாத நாயகர்கள் பலருடைய வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news


பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் வானொலியில் பேசும், 'மனதின் குரல்' 99வது நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில், அக்கட்சியின் நிர்வாகிகள், பிரதமர் மோடியின் உரையை, பொது மக்கள் கேட்கும் வகையில். எல்.இ.டி., திரை போன்றவற்றில் ஒலிபரப்பினர்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:

பிரதமர் மோடியின் மனதின் குரல், நம் நாட்டின் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த, குறிப்பிடத்தக்க சாதனைகளை பேசி வருகிறது. பேசப்படாத நாயகர்கள் பலரின் வாழ்க்கையை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.


latest tamil news


பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைப் பற்றி பேசினார்.

நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர், உடல் உறுப்பு தானம் மற்றும் உயிர்களை காப்பதில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய கடலில், படகில் அமர்ந்து மீனவர்களுடன் இணைந்து, மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-மார்-202316:01:23 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒரு காலத்தில் உயர்ந்த வர்க்கத்திற்கும், பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் கொடுக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகள் இன்று பட்டி தொட்டியில் உள்ள கிராம மக்களுக்கும் கொடுக்க பட்டு அவர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-மார்-202313:37:34 IST Report Abuse
Sampath Kumar பனி வேலு என்று உனது பெயராய் மதிக்க அது பெருத்திருக்கும் நாயகர்களின் வரலாற்றை எப்போ சொல்லவேண்டிய அவசியம் என்ன ? அது நாயகர்களுக்கு தெரியாத அல்லது புரியாத என்னமோ எவர்மட்டும் தான் நாயகர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து போல பேசுவது பைத்தியக்காரத்தனம் எதனை வரலாற்று ஆசிரியர்கள் ஆர்ச்சியாளர்கள் அவர்களின் பங்களிப்பை ஏடுத்து சொல்லி உள்ளார்கள் தெரியவில்லை என்றால் பொய் வரலாறு படி இப்படி அரை வேக்காடு தனமாக உளார்த்தயே
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-202313:07:33 IST Report Abuse
venugopal s அது மன் கி பாத் அல்ல, மங்க்கி பாத்!
Rate this:
Guru - Chennai,இந்தியா
27-மார்-202316:43:28 IST Report Abuse
Guruஇங்கிலாந்தில் பார்த்தோமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X