10,200 பேர் நியமனம் தாமதம் அனுமதி தராததால் அதிருப்தி

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: மின் வாரியத்தில், 54 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண, களப் பிரிவில், 10 ஆயிரத்து, 200 பேரை தேர்வு செய்ய மின் வாரியம் அனுமதி கோரி, அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.தமிழக மின் வாரியத்தில், 'கிளாஸ் - 1, 2, 3, 4' ஆகிய பிரிவுகளில், 1.44 லட்சம் பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, 90 ஆயிரம் பேர்
10,200 people are dissatisfied due to delay in appointment  10,200 பேர் நியமனம் தாமதம் அனுமதி தராததால் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மின் வாரியத்தில், 54 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண, களப் பிரிவில், 10 ஆயிரத்து, 200 பேரை தேர்வு செய்ய மின் வாரியம் அனுமதி கோரி, அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.

தமிழக மின் வாரியத்தில், 'கிளாஸ் - 1, 2, 3, 4' ஆகிய பிரிவுகளில், 1.44 லட்சம் பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, 90 ஆயிரம் பேர் பணிபுரியும் நிலையில், 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.


அதிகரிப்பு



குறிப்பாக, மின் வினியோகம் தொடர்பான கள பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஒருவரே, இரண்டு - மூன்று பேரின் வேலைகளை சேர்த்து செய்ய வேண்டியுள்ளது.

எனவே, கள பிரிவில், 10 ஆயிரத்து, 200 பேரை தேர்வு செய்ய முடிவானது. இதற்கு மின் வாரியம், 2022 ஆகஸ்டில் அரசிடம் அனுமதி கேட்டது.


latest tamil news



இதுவரை அனுமதி கிடைக்காதது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:

புதிதாக ஆட்களை தேர்வு செய்யாத நிலையில், புதிய மின் திட்டங்கள், 'ஆதார்' பதிவு என, கூடுதல் பணிகளால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


நடவடிக்கை



நிரந்தர பணிக்கு ஆட்களை எடுக்காமல், 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிக்கப் போவதாக, நிர்வாகம் தெரிவிக்கிறது.

இதனால் படித்த இளைஞர்கள், நிரந்தர பணியும், சரியான சம்பளமும் இல்லாமல் சிரமப்படுவர்.

எனவே, களப் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், தேவைக்கு ஏற்ப நிரந்தர ஊழியர்களை விரைந்து நியமிக்க, மின் வாரியமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
27-மார்-202314:51:33 IST Report Abuse
Nellai tamilan செலவு செய்த பணத்தை எடுத்து விடுவார்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
27-மார்-202308:25:24 IST Report Abuse
Dharmavaan இது ஏமாற்று வேலை பனி சுமைக்கு அளவீடு என்ன. தொழிற்ச்சாலை சட்டப்படி....எவனும் வேலை செய்வதில்லை. ஒருத்தன் வேலைக்கு 10 பேர் வருகிறார்கள் அதற்கேற்ப லஞ்சம் கேட்கிறார்கள். தனியாரேயொருந்தால் இதில் பாதி பேரில் இரு மடங்கு வெளிநடக்கும் தற்போது தோலை பேசி போல
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
27-மார்-202308:22:22 IST Report Abuse
Dharmavaan ithu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X