நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அமம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆத்தூரில், தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சந்துரு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து, ஆத்தூர்
A student who was training for the NEET exam committed suicide  நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அமம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூரில், தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சந்துரு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி சப்டிவிஷன் போலீசார் தனியார் பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த மாணவர் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


தற்கொலை செய்து கொண்ட சந்துரு, ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்த இவர், இதே பயிற்சி மையத்தில் 2வது முறையாக படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்வதற்காக கயிறு உள்ளிட்டவற்றுடன் பயிற்சி மையத்திற்கு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

thangam - bangalore,இந்தியா
28-மார்-202300:30:10 IST Report Abuse
thangam பெற்றோருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் கொடுக்க வேண்டும். ஏன் சிறு பிள்ளையை படுத்துகிறீர்கள்
Rate this:
Cancel
thangam - bangalore,இந்தியா
28-மார்-202300:29:43 IST Report Abuse
thangam ivarathu
Rate this:
Cancel
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
27-மார்-202322:37:01 IST Report Abuse
பெரிய குத்தூசி அப்பாவிமானவன் கையில் கயித்தை கையில் வைத்து கொண்டு போ என எதையாவது ஆசைவார்த்தை காண்பித்து திமுக ஏதாவது சதிசெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு நீட் தற்கொலை நடக்கிறது என்றால் அதற்கும் திமுக வுக்கும் சம்பந்தம் இல்லை என நாம் ஒதுங்கி செல்ல முடியாது. அரியலூர் அனிதா உயிரோடு வந்தால் எழுந்திரித்து வந்தால் மட்டுமே திமுகவின் வண்டவாளம் தெரியும் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X