அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு ‛ நோட்டீஸ்'

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: எம்.பி பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ராகுல், மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசியதற்கு, நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுலை எம்.பி பதவியில் இருந்து லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். ராகுல் எம்.பியாக பதவி வகித்து

புதுடில்லி: எம்.பி பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



latest tamil news


ராகுல், மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசியதற்கு, நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுலை எம்.பி பதவியில் இருந்து லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். ராகுல் எம்.பியாக பதவி வகித்து வரும் போது, அரசு சார்பில் இல்லம் அளிக்கப்பட்டது. அதன் படி, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராகுல், தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் ராகுலுக்கு அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



விமர்சனம்

:


முன்னதாக ராகுல் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்து, வெளியிட்ட அறிக்கை: எல்ஐசி மூலதனம், அதானிக்கு!. ஸ்டேட் வங்கியின் மூலதனம், அதானிக்கு!. இபிஎப்ஓ அமைப்பின் மூலதனமும் அதானிக்கு!. மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பிறகும், மக்களின் ஓய்வூதிய பணத்தை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவது ஏன்? விசாரணையும் இல்லை, பதிலும் இல்லையே பிரதமரே? ஏன் இவ்வளவு பயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

Balasubramanian - Bangalore,இந்தியா
28-மார்-202307:38:14 IST Report Abuse
Balasubramanian "அம்மா, அப்ப இது நம்ப வீடு இல்லையா?" ஏழு வயதாக இருக்கும் போது, அரசு பங்களாவை காலி செய்ய நேர்ந்த போது அம்மாவை இப்படி கேட்டதாக, ராகுல் ஜி ஒரு பேட்டியில் கூறியது, நமக்கு நினைவுக்கு வருகிறது அவருக்கு அது தற்போதும் நினைவுக்கு வந்தால் சரி
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
28-மார்-202306:42:55 IST Report Abuse
Siva பாஜக ஜாமின் கொடுத்து ராகுல் கைதை தடுக்க வேண்டும். பாஜகவின் பிரச்சார பீரங்கி ராகுல் உள்ளவரை அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-மார்-202304:25:57 IST Report Abuse
J.V. Iyer நடப்பது ஒரு நேர்மையான ஆட்சி என்று ராகுலுக்கு புரியவைத்து அவரை காலிசெய்ய வைப்பது கடினம். ஒரு லாலிபாப் குடுத்துப்பாருங்கள். ஒருவேளை சொன்னதை செய்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X