அ.தி.மு.க, பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை (மார்ச்.28) தீர்ப்பு

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை (மார்ச்.28) தீர்ப்பு வெளியாகிறது.கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, பழனிசாமி பதில் மனு
Judgment in ADMK general body resolution case tomorrow (March 28).  அ.தி.மு.க, பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை (மார்ச்.28) தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை (மார்ச்.28) தீர்ப்பு வெளியாகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil news

வழக்கில், எந்த இறுதி தீர்ப்பும் வெளியாகாத நிலையில், பொதுச்செயலர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடத்தப்படும் என, பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அப்பதவிக்கு பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பொதுக்குழு தீர்மானம், மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக பன்னீர்செல்வம் சார்பில் தொடர்ந்த வழக்கில் நாளை (மார்ச்.28) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.

முன்னதாக பொதுச்செயலர் தேர்தலுக்கு தடை கோரி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

M.Selvam - Chennai/India,இந்தியா
27-மார்-202322:14:02 IST Report Abuse
M.Selvam நாட்டு நாட்டு என்று யாரு பாடி கொண்டாடுவாக நாளைக்கு????
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
27-மார்-202321:59:26 IST Report Abuse
Anantharaman Srinivasan Musical chair ... சிந்துபாத் கதை. இன்னும் இழுத்தடிக்கும்.
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
27-மார்-202320:51:28 IST Report Abuse
rajan_subramanian manian இது உயர்நநேதி மன்றம் தீர்ப்பு.சாதகமாக வரவில்லை என்றால் உச்ச நீதி மன்றம்,அதுவும் இல்லை என்றால் மக்கள் மன்றம்.வடிவேல் சொல்வதைப்போல எண்டு கார்டே கிடையாது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X