வேலூர் :அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 பேர் தப்பியோட்டம்

Added : மார் 27, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலுார்:வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து மூன்று பேரை தாக்கிவிட்டு ஆறு பேர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறை பகுதியில் அரசினர் பாதுகாப்பு இல்லம் உள்ளது.( அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம்) இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த இளம் வயதுள்ள 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 25 ல் மாலை 4:00 மணிக்கு இங்கிருந்த ஒரு
Vellore government attacked 3 people from security house and 6 people escaped  வேலூர் :அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 பேர் தப்பியோட்டம்

வேலுார்:வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து மூன்று பேரை தாக்கிவிட்டு ஆறு பேர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறை பகுதியில் அரசினர் பாதுகாப்பு இல்லம் உள்ளது.( அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம்) இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த இளம் வயதுள்ள 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 25 ல் மாலை 4:00 மணிக்கு இங்கிருந்த ஒரு சிறுவன் தன்னை வேறு ஊரில் உள்ள இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி இல்லத்தின் சுவற்றின் மீது ஏறி நான்கு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினார். நான்கு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரவு 8:00 மணிக்கு அந்த சிறுவன் கீழே இறங்கினார்.


உள்ளே சென்ற அந்த சிறுவன் அன்று இரவு 8:30 மணிக்கு மேலும் 10 சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு இல்லத்திலிருந்த பாதுகாவலர்களை தாக்கி வெளியே துறத்தி விட்டு, இல்லத்தை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெஞ்சு, நாற்காலி, டி.வி.,, டியூப் லைட், சமையல் பொருட்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடி ரகளையில் ஈடுபட்டனர்.


வேலுார் போலீசார் அதிரடியாக உள்ளே சென்று அவர்களை தடுத்தனர்.

இந்நிலையில், இன்று இரவு 8:00 மணிக்கு ஆறு சிறுவர்கள் அங்கிருந்த மூன்று பாதுகாவலர்களை தாக்கி விட்டு வெளிப்புற கதவை திறந்து கொண்டு தப்பியோடினர். படுகாயமடைந்த மூன்று பேரை போலீசார் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படை அமைத்து ஆறு பேரை தேடி வருகின்றனர்.வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் இல்லத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

thangam - bangalore,இந்தியா
28-மார்-202300:27:46 IST Report Abuse
thangam வெற்றி மாரன்ட்ட சொன்னா இதை படமாவே எடுத்து காசு பண்ணிருவாரு.. பா ரஞ்சித் ட்ட மட்டும் சொல்லிடாதீங்க.. ஏன்னு உங்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X