பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய, குஜராத் மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குஜராத்தில்,2002ல் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பலாத்காரம்
Supreme Court Notice in Bilgis Banu case  பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய, குஜராத் மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில்,2002ல் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


latest tamil news



இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை முன்னதாகவே விடுவித்து, குஜராத் அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. இதன்படி, கடந்தாண்டு, ஆக., 15ல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து, பில்கிஸ் பானு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி.நாகரத்தினா அடங்கிய அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.'இது உணர்வுப்பூர்வமான விஷயம். இருப்பினும், சட்டத்துக்கு உட்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Dharmavaan - Chennai,இந்தியா
28-மார்-202308:31:49 IST Report Abuse
Dharmavaan முஸ்லீம் ஆதரவு நீதி மன்றங்களில் அதிகமாக தெரிகிறது...இதை போல் மற்ற பாலியல் குற்றங்களில் இந்த கோர்ட் செயல்படுமா .நீதி நேர்மையில்லை.கேட்பார் யாருமில்லை வேதனை
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-மார்-202307:55:04 IST Report Abuse
GMM உணர்வு பூர்வமாக உள்ள விஷயத்தை விசாரிக்கும் இடம் நீதிமன்றம் கிடையாது? சட்ட பூர்வமானதா? உணர்வு, மரபு பூர்வமாக நிகழ்வு சட்டத்திற்கு உடன்படாது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னர், ஜனாதிபதிக்கு தான் உள்ளது. நீதிபதிக்கு கிடையாது. பேரறிவாளன் விடுதலை போன்று அனைத்து விதமான முடிந்த நடவடிக்கைகள் தானே வழக்கில் இணைந்து கொள்ளும். சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கும். தவறான வழக்கு.
Rate this:
Cancel
28-மார்-202307:33:36 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சுதந்திரத்துக்கு முன்பு, பிரிவினையின்போது, காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்ட பொழுது இது போன்ற எத்தனையோ சந்தர்ப்பங்களில் மூர்க்கம் வன்முறை வெறியாட்டம் ஆடியதுண்டு .... எண்ணற்ற கற்பழிப்புக்களை நடத்தியதுண்டு .... அவற்றை ஒரு சாம்பிளாக காட்டக்கூட அச்சத்துடனேயே திரைப்படம் எடுக்க வேண்டிய நிலைமை .....ஆனால் மூர்க்கன்ஸ் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டதாக புகார் கூறினாலும் அநீதி மன்றங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது ..... வாழ்க இந்திய ஜனநாயகம் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X