மாணவர்கள் விபரங்கள் திருடி விற்பனை : போலீசில் கல்வித்துறை புகார்

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த விபரங்கள்

சென்னை : பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.


இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர், காகர்லா உஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.தொடர்ந்து, நடந்த விசாரணையில், ‛ஜி-பே' வாயிலாக, 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பள்ளி கல்வித்துறையில் இருந்தே, வெளி நபர்களின் ‛இ-மெயில்' முகவரிக்கு, தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது.மாநில பாடத்திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 35 ஆயிரம் பேரின் தகவல் திருடி விற்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.


latest tamil news


இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

28-மார்-202313:01:52 IST Report Abuse
ஆரூர் ரங் பல்வேறு படிப்பு, வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களது செல்பேசி எண்களை நிறுவனங்களில் பணிபுரியும் HR மற்றும் கவுன்சலிங் ஆட்கள் திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிடுகிறார்கள். அந்த தரவுகளிலும் ஏராளமான குளறுபடிகள் இருக்கும். உதாரணமாக என் சித்தப்பாவுக்கு ஒரு பாலிடெக்னிக்கில் சேர வரச் சொல்லி செல்பேசி அழைப்பு வந்துள்ளது. இவர்களை நம்பி😉 போலி டேட்டாவை விலை கொடுத்து வாங்கும் இளிச்சவாய் நிறுவனங்கள் பாவம்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
28-மார்-202307:12:36 IST Report Abuse
vadivelu எல்லாம் தனியார் கல்லூரிகளின் விரோக்கர்களின் வேலை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-மார்-202303:28:23 IST Report Abuse
D.Ambujavalli இத்தனை விவரங்கள் திருடப்பட வேண்டுமானால் வெளியாட்களா வந்திருப்பார்கள்? இவற்றை விற்பதால் வாங்குபவர்களின் நோக்கம் ஒருவேளை நாட்டுக்கே தீங்கு செய்வதாக இருந்தால், இவர்களுக்கு எத்தகைய தண்டனை கிடைக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X