சென்னை : பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
![]()
|
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.
![]()
|
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement