நாட்டை விட்டு ஓடும் காலம் விரைவில் வரும்!

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (79) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்வா.ராஜன், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, அன்னாரது முறை தவறிய பேச்சுக்காக, குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தண்டனைவிதித்த நீதிமன்றமே, உடனடியாக ஜாமினும் வழங்கியுள்ளது.இந்த
The time to flee the country is coming soon!  நாட்டை விட்டு ஓடும் காலம் விரைவில் வரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


வா.ராஜன், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, அன்னாரது முறை தவறிய பேச்சுக்காக, குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தண்டனைவிதித்த நீதிமன்றமே, உடனடியாக ஜாமினும் வழங்கியுள்ளது.

இந்த வழக்குக்கும், பிரதமர் மோடிக்கும்,எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இது, தெளிவாக தெரிந்திருந்தும், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேர, என்னமோ நீதிபதி ஆசனத்தில்,பிரதமர் மோடியே அமர்ந்து, ராகுலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மாதிரி, வானுக்கும், பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கின்றன.


latest tamil news


இவர்களின் துள்ளலை கூர்ந்து கவனிக்கும் போது, ஒரு விஷயம் பட்டவர்த்தனமாக தெரிய வருகிறது... அதாவது, அரசியல்வாதிகள், அரசியல் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் கொலை செய்தால் தண்டிக்கக் கூடாது; ஊழல் செய்தால், கண்டு கொள்ளக் கூடாது...

அவர்கள் நாட்டை கொள்ளையடித்தால் பொருட்படுத்தக் கூடாது; அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, நம் தாய் நாட்டை பற்றி கேவலமாக பேசினால், அதற்கும் எதிர்வினை ஆற்றக்கூடாது...

வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, உள்நாட்டு காவல் துறை, புலனாய்வு அமைப்புக்கள், ராணுவத்தின் முப்படைகள் என எதுவும், அரசியல்வாதிகள் அத்துமீறி, நாட்டைக் காட்டி கொடுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளக் கூடாது. முடிந்தால், அவர்கள் அப்படி காட்டி கொடுப்பதற்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படித்தானே...!

கடந்த, 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வராமல், மேலும் ஐந்தாண்டு காலம், மத்தியில் காங்கிரஸ் அரசு நீடித்து இருந்தால், மேலே சொன்ன அத்தனையும் அட்சரம் பிசகாமல் நிகழ்ந்திருக்கும்.

என்ன செய்ய... நாட்டை கடவுள், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காபந்து பண்ணி விட்டார். அது பொறுக்காமல், புழுதி வாரி துாற்றுகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மார்க்கோசும், உகாண்டா சர்வாதிகாரி இடி அமீனும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று, நாட்டை விட்டு உயிர் தப்ப ஓடியது மாதிரி, இந்த நாட்டிலுள்ள அரசியல்வா(வியா)திகளும் நாட்டை விட்டு ஓடும் காலம் விரைவிலேயே வரும்.

வாழ்க பாரதம்; வந்தே மாதரம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (79)

Selvaraj - Nagercoil,இந்தியா
28-மார்-202322:14:42 IST Report Abuse
Selvaraj இப்படித்தான் ஒரு பூ பத்திரிகை எங்கள் ஊரில் முதலில் செயல்பட்டு வந்தது. பின்னர் அதனை அடித்து துரத்திவிட்டார்கள்.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
28-மார்-202321:39:28 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan ராகுல் வின்சி ஃபெரோஸ் கான்டே என்ற ராகுல் காந்தியை அவர் அதிகம் வெறுக்கும் சாவர்க்கர் இருந்த அதே அந்தமான் சிறையில் இரண்டு வருடங்கள் சிறை தண்டனைக்காக அடைத்து வைத்தால் காங்கிரஸ் திருந்த, பிழைக்க ஒரு இறுதி வாய்ப்பு கிடைக்கும்.
Rate this:
Cancel
28-மார்-202321:34:20 IST Report Abuse
Saai Sundharamurthy AVK இந்தியா பாதுகாப்பு துறையில் வலுவாக வளர்ந்து விடக் கூடாது என்று ரபேல் விவகாரத்தில் மூக்கை நுழைத்து அடாவடியில் இறங்கினார். அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது கூட ராகுலுக்கு புத்தி வரவில்லை. காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்து வெறும் 42 இடங்களை தான் அவரால் பெற முடிந்தது. அந்த உணர்வு கூட இல்லாத ஒரு வக்கில்லாத ராகுல் பிரதம மந்திரி கனவில் ஆட்டம் போட்டார். வேளாண் சட்டங்களை வெளிநாட்டு கயவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வாபஸ் பெற வைத்தார்.ராகுல் ஹிண்டன்பர்க் அறிக்கை குழுவுடன் இணைந்து இந்திய பொருளாதாரத்தை சிதைக்க நினைத்தார். இந்தியாவின் நற்பெயரை கெடுக்க லண்டன் சென்று கண்ட மாதிரி வாய்க்கு வந்த படி சொற்பொழிவு ஆற்றினார். சீன நாட்டுக்கு இந்தியா சேவகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.. பாகிஸ்தான் நாடு இந்தியாவை விட மேலோங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. இந்தியா ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதெல்லாம் எதற்காக என்றால் இந்தியா என்பது இந்துக்களின் தேசமாக மாறி விடக் கூடாது என்கிற வெறித்தனம் தான். பாஜக என்கிற கட்சி இருக்க கூடாது. இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அழிக்க நினைக்கிறார். சமஸ்கிருதம் போன்ற மொழிகளை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும், ஹிந்து கலாச்சாரங்களை அழித்து ஹிந்துக்களை எல்லாம் மதம் மாற்ற வேண்டும் என்று துடிக்கிறார். ஆகவே, ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு ஓடும் காலத்தை நாங்கள் மனமார வரவேற்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X