திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் 2024 - 25ல் பயன்பாட்டுக்கு வரும்

Added : மார் 28, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி,: புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி திருத்தப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்கள், 2024 - 25 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, பள்ளி பாடத் திட்ட நடைமுறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடப் புத்தகங்களில் இதற்கான திருத்தங்கள்
The revised textbooks will come into use in 2024-25   திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் 2024 - 25ல் பயன்பாட்டுக்கு வரும்


புதுடில்லி,: புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி திருத்தப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்கள், 2024 - 25 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, பள்ளி பாடத் திட்ட நடைமுறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடப் புத்தகங்களில் இதற்கான திருத்தங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது.


latest tamil news


புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள், 2024 - 25ம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய பாடத் திட்ட கட்டமைப்பின்படி இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மத்திய கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:

கொரோனா பாதிப்புக்கு பின் 'டிஜிட்டல்' வழியில் கற்றலின் தேவையை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளோம்.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் திருத்தப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள், 'டிஜிட்டல்' வடிவிலும் கிடைக்கின்றன. அதை அனைவரும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

28-மார்-202307:22:21 IST Report Abuse
பேசும் தமிழன் சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் திருட்டு வேலை .... ஏதோ நேருவும் காந்தியும் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை போன்று வரலாற்றை திரித்து எழுதி வைத்து உள்ளார்கள் .....உண்மையில் சிறையில் வாடிய ... உயிர் நீத்த வீரர்கள் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பு செய்து உள்ளார்கள் ....அது மட்டுமல்லாமல் வீர சிவாஜி .... மகாரான பிரதாப் ....போன்ற ராஜக்களை பற்றிய உண்மைகளை மறைத்து ...நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அந்நியர்களை பெரிய வீரர்கள் போல சித்தரித்து உள்ளார்கள் திருட்டு காங்கிரஸ் கட்சியினர் ......அவை அனைத்தும் திருத்தப்பட்டு உண்மையான வரலாறு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
Rate this:
நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
28-மார்-202312:41:21 IST Report Abuse
நரேந்திர பாரதி அதற்கு காரணம், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து யார், யாரெல்லாம் கல்வி அமைச்சர்களாக இருந்தனர் என்பதை புரட்டிப் பாருங்கள்...அமைதி மார்க்கத்தின் ஆளுமை மற்றும் நயவஞ்சகம் புரியும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X