ராமநாதபுரம்-ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று துவங்கியுள்ளது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 27 முதல் ஏப். 6 வரை நடக்கிறது. நேற்று காலை 7:22 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு அபிேஷகம் செய்து, தீபாராதனையில் கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து காப்புக்கட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் இரவு 8:00மணிக்கு சண்முகர் அர்ச்சனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.5ல் பங்குனி உத்திரம் அன்று காலை பிரம்மபுரிஸ்வரர் கோயில் நொச்சி வயல் ஊருணியில் இருந்து பால்குடம், பால்காவடிகளுடன் ஊர்வலமாக வந்து காலை 11:00மணிக்கு சுவாமிக்கு அபிேஷகத்தில் தீபாராதனையும், அன்று இரவு 7:00மணிக்கு பூக்குழி இறங்கும் பைவம் நடக்கிறது.
மறுநாள் ஏப்.6ல் சுவாமி திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.