யானைகளை கொல்லும் மின்வேலிகள் அகற்றிட சூழல் அமைப்பு வலியுறுத்தல்

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகளின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் சட்டவிரோத மின்வேலிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.இயற்கை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவிடம் அளிக்கப்பட்ட மனு:கோடையில் குடிநீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகள் இடம் பெயர்கின்றன. அப்போது, மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகின்றன. மூன்று
Ecosystem urges removal of electric fences that kill elephants   யானைகளை கொல்லும் மின்வேலிகள் அகற்றிட சூழல் அமைப்பு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகளின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் சட்டவிரோத மின்வேலிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவிடம் அளிக்கப்பட்ட மனு:

கோடையில் குடிநீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகள் இடம் பெயர்கின்றன. அப்போது, மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகின்றன. மூன்று ஆண்டுகளில், மின்சாரம் தாக்கி, 100க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.


latest tamil news


மேட்டுப்பாளையம், பிளாக்தண்டர் பின்புறம் உள்ள குளத்தில் நீர் இல்லாததால், யானைகள் ஊட்டி சாலையை கடந்து, ஓடந்துறை பகுதிக்கு வருகின்றன. இங்கு, யானை வழித்தடங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களில், மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மின்வேலிகளில் டி.சி., மின்சாரத்துக்கு பதில் ஏ.சி., மின்சாரத்தை பயன்படுத்துவதாலும், வெடிகள் வைக்கப்படுவதாலும் யானைகள் கொல்லப்படுகின்றன.

எனவே, மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள ஊமப்பாளையம், வனக்கல்லுாரி, பாலப்பட்டி, சமயபுரம், உப்புப்பள்ளம் போன்ற இடங்களில் உள்ள மின் வேலிகளை ஆய்வு செய்து, சட்டவிரோத மின்வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை, மாவட்ட வன அலுவலருக்கு எம்.பி., பரிந்துரை செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Indhiyan - Chennai,இந்தியா
29-மார்-202300:57:25 IST Report Abuse
Indhiyan மின்வேலிக்கு பதிலாக அலாரம் மாதிரி செட்டப் செய்தால் யானைகளும் மற்றும் எந்த மிருகமாக இருந்தாலும் ஓடிவிடும். இது மாதிரி செய்யலாமே. யானைகள் வரும் இடங்களில் அரசோ, வனத்துறையோ அல்லது தன்னார்வ நிறுவனங்களோ மக்களுக்கு எடுத்து சொல்லி ஏற்பாடு பண்ணலாம். மிருகங்கள் சாவாது, பயிர் பாதுகாக்கப்படும், அனாவசிய மின் செலவு கிடையாது.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
28-மார்-202312:49:19 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அப்ப யானைகளால் விவசாயிக்கு ஏற்படும் இழப்பை வன உயிரியல் பாதுகாப்பு கழகம் தருமா? தவிர டம்மி பீஸிடம் எல்லாம் மனு தரலாமா? அது குப்பைக்குப் போயிருக்கும்
Rate this:
Cancel
28-மார்-202312:11:34 IST Report Abuse
ஆரூர் ரங் பல நாடுகளில் 40 முதல் 80 வோலட் டிசி மின்சாரத்தைப் பயன்படுத்தப்படுகிறது.. நம்ம ஊரு யானைகள் புத்திசாலித்தனம் மிகுந்தவை. அந்த DC மின்கம்பிகள் மீது மரக்கட்டைகளைப் போட்டு வழி😛 ஏற்படுத்தி வயல்களுக்குள்ளே செல்கின்றன. எனக்கென்னவோ யானைகளின் எண்ணிக்கை காட்டின் அளவுக்கு மீறிவிட்டது எனத் தோன்றுகிறது. மாற்று இடங்களுக்கு அனுப்புவது மேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X