''இருளர் மக்களின்சோக கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டத்துல, இருளர் இன மக்களுக்கு, அரசு சார்புல நுாத்துக்கணக்கான தொகுப்பு வீடுகளை கட்டி குடுத்திருக்காவ... ஆனா, அந்த வீடுகளுக்கு பல வருஷமா மின் இணைப்பு இல்ல வே...
''ஏன்னா, கூலி வேலைக்கும், பாம்பு பிடிக்கும் வேலைக்கு போற அவங்களால, மின் இணைப்புக்கான டிபாசிட் பணம், 10 ஆயிரத்தை கட்ட முடியல... இதனால, கொசுக் கடியிலயும், வெக்கையிலயும் கிடந்து தவிக்காவ வே...
![]()
|
''படிக்கிற குழந்தைகள், அகல் விளக்குல படிச்சிட்டு இருக்காவ... 'இவங்களது மின் இணைப்பு டிபாசிட்டுக்கு சிறப்பு நிதி தரணும்'னு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறைக்கு போன வருஷமே கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் இல்ல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement