கூட்டுறவு வங்கி பணியாளர்கள்  கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு

Added : மார் 28, 2023 | |
Advertisement
கடலுார் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயிணி முன்னிலை வகித்தனர். ஆலோசகர் பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் மண்டல இணை செயலாளர் சீனுவாசன், மாவட்ட துணை தலைவர்கள்
Co-operative Bank employees decided to petition the Collector   கூட்டுறவு வங்கி பணியாளர்கள்  கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு



கடலுார் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.

தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயிணி முன்னிலை வகித்தனர். ஆலோசகர் பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில் மண்டல இணை செயலாளர் சீனுவாசன், மாவட்ட துணை தலைவர்கள் தாமோதரன், சாந்தகுமார், இணை செயலாளர்கள் வாசுகி, உமா மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும், நடைமுறை சிரமங்களை களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் பேரணி நடக்கிறது.

அதன்படி, அன்றைய தினம் கடலுார் ஜவான்ஸ்பவன் சாலையில் இருந்து பழைய கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டரிடம் மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X