விருத்தாசலம் : பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி உஷா, 37; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, 38; ஜெயலட்சுமி, 23, ஆகியோர் உஷாவை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் லட்சுமி, ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.