புவனகிரி : புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெருமாத்துார் ஓ.என்.ஜி.சி., அருகில் டாஸ்மாக் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, பெருமாத்துார் ஆதிவராகநத்தம் மெயின்ரோடு ராபர்ட், 42; என்பவரிடம் இருந்து 4 குவாட்டர் பாட்டில்களும், புவனகிரி பங்களா அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சி.முட்லுார் புதுரோடு பூபதி, 28; என்பவரிடம் இருந்து 5 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.