தென் மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' ரயில் செல்லுமா?

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது: சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட தடத்தில்,
Will Vande Bharat train reach southern districts?  தென் மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' ரயில் செல்லுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது: சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட தடத்தில், வந்தே பாரத் இயக்காதது ஏன் என தெரியவில்லை.



latest tamil news

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ., வழித்தடத்தில், சென்னை -- திருநெல்வேலி இடையே முழுதும் மின்மயமாக்கல் உடன் கூடிய, இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க உள்ளனர். எனவே, இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன.


மற்ற முக்கிய வழித்தடத்தில் இருப்பதுபோல், தென் மாவட்டங்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயில்களின் சேவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பயணியரின் அத்தியாவசிய தேவையாக கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

mupaco - Madurai,இந்தியா
28-மார்-202315:28:33 IST Report Abuse
mupaco Vaigai pondru nellaiyil irunthu parani express vendum.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
28-மார்-202312:02:13 IST Report Abuse
தமிழ்வேள் வந்தே பாரத் சதாப்தி, தேஜாஸ் ரயில்களை மலையாளிகள் கேப்பதே கிடையாது.. காசர்கோடு முதல் - திருவனந்தபுரம் வரை செல்ல 12 மணி நேரம் ஆனாலும், அவர்களுக்கு தேவை முக்கிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் இன்டெர் சிட்டி விரைவு வண்டிகள் மட்டுமே. பெரும்பாலான மக்களுக்கு பயன்படும் ... இரண்டாம் வகுப்பு இருக்காய் வசதி, பொது பெட்டிகள், மற்றும் ஏசி சேர் கார்கள் சில. மட்டுமே போதுமானவை ....சென்னை காரன் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்றால் இடைவழி நகரங்கள், கார்பொரேஷன், மாவட்ட தலைநகர மக்கள், என்ன கட்டை வண்டியில் பயணம் செய்வார்களா? இல்லை கால் நடையாகவா? இன்டெர் சிட்டி வண்டிகள் மட்டுமே இன்றைய தேவை ....கொழுத்துப்போன பணக்கார பயணிகளுக்கான வண்டிகள் அல்ல ....
Rate this:
Natarajan Pitchiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-202313:46:48 IST Report Abuse
Natarajan Pitchiahவெரி குட் அனாலிசிஸ்...
Rate this:
29-மார்-202304:23:05 IST Report Abuse
Narasimhachari Rengarajanசென்னை மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கலாம் ஏனென்றால் வார நாட்களில் இந்த வண்டி சுமார் 15 முதல் 25 இருக்கைகள் நிரப்பப்படாமல் செல்கின்றது....
Rate this:
Cancel
28-மார்-202311:49:31 IST Report Abuse
ஆரூர் ரங் மெட்ரோ துவங்கினால் அந்த ஊர் எம்பியே யூனியன் துவக்கி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தூண்ட வாய்ப்புள்ளது. கம்யூனிஸ்டுக்கு😛 வாக்களிக்கும் ஊர்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது வீண்.
Rate this:
maharaja - திருநெல்வேலி,இந்தியா
28-மார்-202312:28:50 IST Report Abuse
maharajaஉன் எண்ணம் ஏன் தான் இப்படி போகுதோ ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X