துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் வாலிபர் கொலை; கள்ளக்காதலால் விபரீதம்

Added : மார் 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கள்ளக்காதலால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவரை மங்களமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 30, திருமணமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கும் இவரது உறவுக்காரரின் மனைவி ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக
Gunman kills youth with gun; Misfortune due to forgery   துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் வாலிபர் கொலை;  கள்ளக்காதலால் விபரீதம்


பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, கள்ளக்காதலால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவரை மங்களமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


பெரம்பலுார் மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 30, திருமணமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கும் இவரது உறவுக்காரரின் மனைவி ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இவரது மாமனார் வாலிபர் அஜித்தை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை விட மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு 10:30 மணியளவில் அஜித்திடம் அவரது மாமனார் கள்ளக்காதலை விடுமாறு கூறினார். இதற்கு அஜித் மறுப்பு தெரிவித்தார்.


இதனால், ஆத்திரமடைந்த அஜித்தின் மாமனார் விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாக அஜித்தை சுட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து அஜித்தின் மாமனாரை கைது செய்து விசாரிக்கின்றனர். நரிக்குறவர் வாலிபர் கள்ளக்காதல் கசுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28-மார்-202319:08:06 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஜாதிகள் என்பது பிரிவுகள். தரம் என்று சிலர் நம்புகிறார்கள். நடிகைகள் குழந்தை பெற்று வளர்த்த பின்பு விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்து குழந்தை பெறுகின்றனர். அப்படி மக்கள் செய்ய முடிவதில்லை. அதனால் நடிகர் மக்கள் என்கிற ஜாதி பிரிவுகள் இருக்கும்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
28-மார்-202311:35:04 IST Report Abuse
RaajaRaja Cholan பத்திரிகைகள் செய்திகளை ஜாதிகளை குறிப்பிடாமல், மதத்தை குறிப்பிடாமல் தெரிவித்து பழகும் நடைமுறை வரவேண்டும்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
28-மார்-202310:23:55 IST Report Abuse
David DS இதுக்கு எதுக்கு அவர் ஜாதியை உள்ளே இழுக்கறீங்க?
Rate this:
28-மார்-202317:07:03 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்சார் .... அதை உள்ளே இழுக்கலன்னா நீங்க நடிகர் அஜித் ன்னு நினைக்க வாய்ப்பிருக்கு .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X