நரிக்குறவ வாலிபர் சுட்டுக் கொலை
நரிக்குறவ வாலிபர் சுட்டுக் கொலை

நரிக்குறவ வாலிபர் சுட்டுக் கொலை

Added : மார் 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
பெரம்பலுார் அருகே கள்ளக்காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.பெரம்பலுார் மாவட்டம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித், 30. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தன் உறவினர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். மாமனார் கண்டித்தும் கள்ளக் காதலை கைவிட அஜித் மறுத்துள்ளார்.

பெரம்பலுார் அருகே கள்ளக்காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலுார் மாவட்டம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித், 30. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தன் உறவினர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார்.

மாமனார் கண்டித்தும் கள்ளக் காதலை கைவிட அஜித் மறுத்துள்ளார். நேற்று இரவு 10:30 மணிக்கு அஜித்திடம் அவரது மாமனார் மீண்டும் அறிவுரை கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஜித்தின் மாமனார், விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டுத் துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த மங்கலமேடு போலீசார், அஜித் மாமனாரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

28-மார்-202317:08:03 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அஜித்தின் துப்பாக்கிக்கு இனி வேலை இல்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X