பி.எப்., வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2021 - 2022ம் ஆண்டில், 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைவாக கருதப்பட்டது. கடைசியாக 1977-78ம் ஆண்டில் வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முன்பு தொழிலாளர் வருங்கால

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.




latest tamil news


கடந்த 2021 - 2022ம் ஆண்டில், 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைவாக கருதப்பட்டது. கடைசியாக 1977-78ம் ஆண்டில் வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முன்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.



latest tamil news

இதைத்தான் கடந்த 2022ஆம் ஆண்டில் 8.1 சதவீதமாக குறைத்தனர். அப்போது இதற்கு கடுமையான எதிர்ப்பு வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து எழுந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பி.எப்.வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டில்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எப்., வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள, சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

S. Narayanan - Chennai,இந்தியா
28-மார்-202318:30:38 IST Report Abuse
S. Narayanan குய்யோ முய்யோ என்று கதறிய எதிர் கட்சிகள் நிலை பாவம் என்ன சொன்னாலும் இப்படி கைமேல் பலன் கிடைக்கிறது மக்களுக்கு. பா. ஜ பற்றி இனி எதை சொல்லலாம் என்று நினைத்து எதுவும் சொல்லாமல் இருப்பது தான் நல்லது.
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
28-மார்-202318:27:49 IST Report Abuse
Sriniv This should be brought to at least 9%. Both Cong and BJP are same in these matters.
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
28-மார்-202312:46:40 IST Report Abuse
S Regurathi Pandian தொழில் வளர்ச்சி இருந்திருந்தால் வட்டி வீதத்தை குறைக்க வேண்டிய தேவை இருந்திருக்காது? .4 % குறைத்துவிட்டு .05% கூட்டுவது உண்மையான அதிகரிப்பு அல்ல. 12 சதவீதமாக இருந்ததை காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து படிப்படியாக குறைத்துள்ளனர். தொழிலாளர்களின் சேமிப்பின் மீது கைவைத்து அவர்களது அடிவயிற்றில் அடிக்கும் செயலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X