கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள் மீட்பு

Added : மார் 28, 2023 | |
Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் மீட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல் துருகம் வனப்பகுதியையொட்டி, சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதன் நடுவில் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் இரண்டு கரடிகள் விழுந்து கத்திக்கொண்டிருந்தை
Rescue of 2 bears that fell into the well  கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள் மீட்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல் துருகம் வனப்பகுதியையொட்டி, சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதன் நடுவில் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் இரண்டு கரடிகள் விழுந்து கத்திக்கொண்டிருந்தை பார்த்தனர்.


ஆம்பூர் வனத்துறையினர், தீயணைப்பு துறையை சேர்ந்த 20 பேர் கரடிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றின் மேல்பகுதியிலிருந்த புதர் அகற்றப்பட்டு, ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி சாய்தள பாதை அமைக்கப்பட்டது. பிறகு கரடிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X