அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (18+ 1) | |
Advertisement
புதுடில்லி: எம்.பி.என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை விதிக்குட்பட்டு காலி செய்வதாக, ராகுல் அறிவித்துள்ளார்.ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என லோக்சபா செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறினார்.மகிழ்ச்சியான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: எம்.பி.என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை விதிக்குட்பட்டு காலி செய்வதாக, ராகுல் அறிவித்துள்ளார்.




latest tamil news


ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என லோக்சபா செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறினார்.



மகிழ்ச்சியான தருணம்


இது குறித்து ராகுல் லோக்சபா செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. எந்த பாரபட்சமும் இல்லாமல் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



கண்டனம் தெரிவித்த கார்கே:


இது குறித்து காங்., தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுலை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அவரை பயமுறுத்தும், அரசின் அணுகுமுறையை கண்டிக்கிறேன் அவர் பங்களாவை காலி செய்தால், அவரது தாயுடனோ அல்லது என்னுடவோ இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18+ 1)

29-மார்-202309:09:21 IST Report Abuse
பேசும் தமிழன் //அரசு பங்களாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல் // ...அப்படியானால் முன்பு நேஷனல் ஹெரால்டு போல அரசு பங்களாவையும் ஆட்டைய போடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாரா ???
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-மார்-202321:39:13 IST Report Abuse
Nagarajan D அப்படியே இந்தியாவை விட்டு காலி செய்ய பாரு பப்பு காந்தி
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
29-மார்-202308:22:59 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM மோடிஐ எதிர்ப்பதை தவிர அவர் என்ன அப்படி குற்றம் செய்தார் அதனையே போல அவர் ஆட்சி காலத்தில் யாரையும் உலக பணக்காரங்க மாற்றினார் அவ்வளவு வன்மமா உண்மை தெரியும் ஒருநாள் அம்மா அம்மா என்று இருந்தவர் உண்மை ஒரு நாள் தெரிந்தது...
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). வேற வழி. இல்லையெனில் கோர்ட் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து போல் ஆகிவிடும்.2). பொறகு தண்டனை குறைப்பு மேல்முறையீடு அப்பீல் பண்ண முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X