சென்னை, காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வரும் சனிக்கிழமை இரவு, 'கர்மயோகியும், சுதந்திர போராட்ட வீரருமான சர்வானந்த் கவுல் பிரேமி' குறித்த சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.
காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு -டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.
அதன்படி, வரும் சனிக்கிழமையான ஏப்., 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு, 78வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், 'கர்மயோகியும், சுதந்திர போராட்ட வீரருமான சர்வானந்த் கவுல் பிரேமி' என்ற தலைப்பில் சமூக சேவகரும், சர்வானந்த் கவுல் பிரேமியின் மூத்த மகனுமான ராஜீந்திர பிரேமி சொற்பொழிவாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com/channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி', காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி யு -டியூப், காஞ்சி மடத்தின் டுவிட்டர் ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.