மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் தலைமையில் நடந்தது.
சொத்துவரி பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைககள் குறித்து 72 மனுக்களை மேயர் பெற்றார். சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவருக்கு உடனுக்குடன் பெயர் மாற்றத்திற்கான அனுமதி ஆணையை வழங்கினர்.
மண்டலத் தலைவர் வாசுகி, உதவி கமிஷனர் காளிமுத்தன், நிர்வாக அலுவலர் ரங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.