பேரையூர்:மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ளது தெய்வநாயகபுரம். இங்கு, காளியம்மன் கோவில் பொங்கல் விழா, நடந்து வருகிறது.
இதற்காக, இதே ஊரைச் சேர்ந்த, சேலத்தில் புத்தகக் கடை நடத்தி வந்த தங்கப்பாண்டி, 56, சென்னையில் புத்தகக் கடை நடத்தி வந்த மாயாண்டி, 60, சென்னை தனியார் நிறுவன ஊழியர் கண்ணன், 30, ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
பொங்கல் விழாவிற்கு பொருட்கள் வாங்க பேரையூருக்கு மூவரும் ஒரே டூ - வீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் புறப்பட்டனர்.
சிலைமலைப்பட்டி ரோட்டில் வந்த போது எதிரே, தேனி மாவட்டம் போடியிலிருந்து ராஜபாளையத்துக்கு கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.டிரைவர் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.