''போலீஸ் டிபார்ட்மென்ட்ல, 15 வருஷமா பதவி உயர்வு இல்லாம தவிக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''அவங்களுக்கு என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''போன, 2008ல தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப, தமிழக போலீஸ்ல, 745 பேர் எஸ்.ஐ.,யா நியமிக்கப்பட்டாவ... இதுல, 130 பேர் இன்னும் பதவி உயர்வு கிடைக்காம தவிக்காவ...
![]()
|
''இத்தனைக்கும், 150 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியா தான் கிடக்காம்... ஆனாலும், 'புரமோஷன்' பேச்சையே காணல வே...
''இதுல கொடுமை என்னன்னா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படையில, 2011ல சேர்ந்த எஸ்.ஐ.,க்களுக்கு சட்டம் - ஒழுங்கை தவிர, இதர பிரிவுகள்ல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு போட்டுட்டாவ...
''அவங்களுக்கு முன்னாடி சேர்ந்த எங்களை, 15 வருஷமா காக்க வைக்கிறது நியாயமான்னு பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் குமுறுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement