சாவர்க்கர் குறித்து பேச்சு : சரத் பவாரும் கடும் அதிருப்தி

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
''சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசுவதை ராகுல் தவிர்க்க வேண்டும். இதுபோல் பேசினால், லோக்சபா தேர்தலின் போது மஹாராஷ்டிராவில் காங்., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.பிரதமர் மோடியை பற்றி அவதுாறாக பேசிய வழக்கில் தண்டனை பெற்றதால், லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு
Talk about Savarkar: Sharad Pawar is also very dissatisfied  சாவர்க்கர் குறித்து பேச்சு : சரத் பவாரும் கடும் அதிருப்தி

''சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசுவதை ராகுல் தவிர்க்க வேண்டும். இதுபோல் பேசினால், லோக்சபா தேர்தலின் போது மஹாராஷ்டிராவில் காங்., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை பற்றி அவதுாறாக பேசிய வழக்கில் தண்டனை பெற்றதால், லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், 'என் பெயர் சாவர்க்கர் அல்ல. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்' என, குறிப்பிட்டார்.


latest tamil news


இதற்கு, மஹாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், காங்., கூட்டணியில் உள்ளவருமான உத்தவ், இதற்காக ராகுலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள காங்கிரசின் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசும் இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது. புதுடில்லியில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், இது குறித்து தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது:
வீர் சாவர்க்கர் குறித்து பேசுவதை ராகுல் தவிர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயத்தில் தலையிடுவது சரியல்ல.
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் கட்சி அடங்கிய கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், சோனியாவிடமும், ராகுலிடமும் இது குறித்து நேரடியாகவும் சரத் பவார் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சரத் பவார் அறிவுரையை ஏற்று செயல்பட, காங்., முடிவு
செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், ''வீர் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் மீது அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.- புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

r.sundaram - tirunelveli,இந்தியா
29-மார்-202317:01:27 IST Report Abuse
r.sundaram ராகுல் நிறைய படிக்க வேண்டும். சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ், திலகர், லாலா லஜிபதி ராய், நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற எண்ணற்ற விடுதலை வீரர்கள் வாழ்ந்து மறந்த நாடு இது. இந்த மாதிரி மாணவர்களின் சரித்திரத்தை ராகுல் கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சுதந்திரம் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியும். அதை தெரிந்து கொள்ளாமல், வாயில் வெள்ளி கரண்டியுடன் பிறந்த இத்தாலிக்காரன் நான், என்ற அகம்பாவம் இருந்தால் இந்த மாதிரி தண்டனைகள் தொடரும்.
Rate this:
Cancel
R Sudarsan -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202311:23:56 IST Report Abuse
R Sudarsan I know the ways Mumbai Kars, especially Shiv Sainiks TREAT their opponents- using black ink. Let Rahul visit Mumbai
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
29-மார்-202309:51:25 IST Report Abuse
Fastrack RSS உறுப்பினர் அல்ல சாவர்க்கர் ..இவரை ஜெயிலில் நின்ற நிலைமையிலேயே கழிப்பறையை உபயோகிக்க வைத்தார்கள் .. இவரது வாழ்க்கை ரொம்பவும் கண்ணீர் வரவழைக்கும் ..காந்தி கொலையில் இவரையும் கைது செய்து ஓராண்டுகள் கழித்து விடுதலை செய்தார்கள் ..அங்கே அவர் தாத்தா எதினாவுக்கு சிகரெட் பத்த வைத்து கொடுத்தார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X