பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அரசு இன்று ஆலோசனை!

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு தேவையா என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 - 18ல் பொதுத்தேர்வு அமலுக்கு வந்தது. அதன் பின், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், பள்ளி படிப்பை பாதியில் கைவிடுவது
Plus 1 general exam canceled? Government consultation today!   பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அரசு இன்று ஆலோசனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு தேவையா என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 - 18ல் பொதுத்தேர்வு அமலுக்கு வந்தது. அதன் பின், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், பள்ளி படிப்பை பாதியில் கைவிடுவது அதிகரித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த, 50 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகினர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், இரண்டு வாரங்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


இதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர்ந்தால், பிளஸ் 2வில் இடைநிற்றல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வு முறையை தொடர்வதா, நிறுத்துவதா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், இன்றும், நாளையும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில், மாவட்ட வாரியாக பொதுத்தேர்வு செயல்பாடுகள், வரும் கல்வி ஆண்டுக்கான திட்டங்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர். அவர்களின் கருத்துகளின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

adalarasan - chennai,இந்தியா
29-மார்-202311:52:12 IST Report Abuse
adalarasan ரத்து செய்துவிடுங்கள்.. தேர்வு வேண்டாம் எல்லாரும் பாஸ் ??????? எதற்கு ஆலோசனை எல்லாம்.?/
Rate this:
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
29-மார்-202311:42:05 IST Report Abuse
Veluvenkatesh திராவிடியா அரசு டாஸ்மாக் வியாபாரத்தை கவனிக்கும் அளவுக்கு மாணவர்களின் கல்வி தரத்தையும் கவனிக்க வேண்டும். தேர்வு எழுதவில்லை-வரவில்லை என்றால் தேர்வை ரத்து செய்யும் கோமாளிகளை டாஸ்மாக் நாட்டில் தான் பார்க்க முடியும். இதற்கு ஒரு மந்திரி-அதிகாரிகள் கூட்டம்? பெற்றோர் எனும் முறையில் உங்களை நாங்கள் கேட்டுக்கொள்வது-தயவு செய்து எங்கள் பிள்ளைகளை படிக்க விடுங்கள்.
Rate this:
Cancel
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
29-மார்-202310:53:43 IST Report Abuse
Senthil - Proud to be an Indian பணிசெய்யாத, பாடம் நடத்தும் தகுதி இல்லாத, பெஞ்சை தேய்த்து மாத சம்பளம் தெண்டமாக வாங்க கூடிய, லீவு எடுத்தே என்ஜோய் பண்ண கூடிய, அரசு பள்ளி ஆசிரியர்களை கேள்வி கேக்க, தட்டி கேக்க, பாவ பட்ட அரசு பள்ளி மாணவர்களை பாதுகாக்க இந்த அரசுக்கு துப்பில்லை.. ஒழுங்கா பாடத்தை நடத்தின என் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல், பாதியில் நிற்க போகிறார்கள்.. இப்போதய அரசு பள்ளிகளில், திறமை இல்லாத அரசு ஆசிரியர்களை நம்பி பிள்ளைகளை சேர்ப்பது - பாவம், அத பெற்றோரும், பிள்ளைகளும்தான் ... சுத்தமா சரியில்லப்பா ... இன்னும் எனக்கு தெரிந்து ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் வரும் நேரம் காலை - பத்தரை மணி - மாலை . மூன்று மணி கேட்க நாதியில்லை ..... அதற்காக ஒதுக்க பட்டது தான் விளையாட்டு வகுப்பு - மூன்று - நான்கு அரை மணி எப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X