கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.
அதில், ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று முதல், பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் ஏப்., 2ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, 3ல் திருக்கல்யாண உற்சவம், 5ல் தேரோட்டம், 7ல் ஆளும் பல்லாக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.