ரூ.100 கோடி மோசடி: சகோதரர்களை கைது செய்ய கோரிக்கை

Added : மார் 29, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
பல்லடம் அருகே, நுாறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவான சகோதரர்களை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன்கள் விஜயகுமார், 47, மற்றும் சிவகுமார், 40.இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பலரை, நுால் வியாபாரத்தில் பங்குதாரராக
Rs 100 crore scam: Demand to arrest brothers  ரூ.100 கோடி மோசடி:   சகோதரர்களை கைது செய்ய கோரிக்கை

பல்லடம் அருகே, நுாறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவான சகோதரர்களை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன்கள் விஜயகுமார், 47, மற்றும் சிவகுமார், 40.

இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பலரை, நுால் வியாபாரத்தில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி, அவர்களின் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, 100 கோடிக்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள், நேற்று பல்லடத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

சிவகுமார், விஜயகுமார் மற்றும் இவரது மகன் ராகுல் பாலாஜி ஆகியோர், எங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி, வீடு, இடம், நில பத்திரங்களை வாங்கி கொண்டனர். அவற்றை பல வங்கிகளில் அடமானம் வைத்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். பல்லடம் போலீசில் புகார் அளித்த ஒரு மாதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்து, மூன்று மாதங்களாக அவர்களை தேடி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் கோர்ட் ஒரு மாதத்துக்கு முன் 'பிடிவாரன்ட்' பிறப்பித்தும், போலீசார் இன்னும் தேடுகின்றனர்.

மற்றொரு புறம், எங்கள் சொத்துக்களை 'ஜப்தி' செய்ய வங்கியினர் தயாராகி வருகின்றனர். தலைமறைவாக உள்ளதாக கூறும் சிவகுமாரை, சில தினங்களுக்கு முன் பல்லடத்தில் நாங்களே பார்த்தோர்.

போலீசாரிடம் கேட்டால், நீங்களே கண்டுபிடித்து பிடித்து தாருங்கள் என்கின்றனர். போலீஸ் உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மோசடியில் ஈடுபட்ட சகோதரர்களை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாது போராட்டத்தை தொடர்ந்தனர்.

போலீசார் தாமதம்

கோவையை சேர்ந்த பிரியா கூறுகையில்,''சாதாரண திருட்டு வழக்குகளில் கூட, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசார், கோடிக்கணக்கில் சுருட்டி தலைமறைவாக உள்ள சகோதரர்களை பிடிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.''கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தும், போலீசார் கைது செய்யாதது ஆச்சரியமாக உள்ளது. பத்திரம், பணம் மற்றும் குடும்பத்தை இழந்து நிற்கிறேன். இதற்கு மேல், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை,'' என, கண்ணீர் மல்க கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

Kanagaraj M - Pune,இந்தியா
30-மார்-202314:56:58 IST Report Abuse
Kanagaraj M அன்பார்ந்த மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வாங்கும் போது ஒரு முகமும், திருப்பி கேட்கும் போது இழுத்தடிப்பதும் இப்போது உள்ள மக்களுக்கு பொழுது போக்காக உள்ளது.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
30-மார்-202308:52:44 IST Report Abuse
R Ravikumar பெரிய கோடீஸ்வரர்கள் , அரசின் அங்கீகாரத்துடன் , வங்கியில் கடன் வாங்குவார்கள் . காரணம் என்ன ? தனது balance சீட் , லாப கணக்கு , சிபில் ஸ்கோர் போன்றவற்றை தெளிவாக வைத்து இருப்பார்கள் .மேலும் அரசுக்கு நிதி கொடுப்பார்கள் , இதனால் தான் அவர்களுக்கு உடனடி கடன் கிடைக்கும் . அரசின் தலையிடு தவிர , வங்கிகள் மூடர்கள் அல்ல . நீங்கள் தொழிலில் கற்றுக்கொண்டு , ஈடுபட்டு அதில் கொடுக்கல் வாங்கல் லாப கணக்கை உறுதிப்படுத்திய பின்னர் தான் , நீங்கள் அரசு அனுமதித்த தொழில் முனைவோர்களை , ஆராய்ந்த பிறகு அணுக வேண்டும் . குருட்டுத்தனமாக சீட்டு பணம் கட்டுவது chit fund , இது போன்ற ஆட்களை நம்பி பணம் கொடுப்பது போன்றவை பையித்தியக்காரத்தனம் . .
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
30-மார்-202300:04:28 IST Report Abuse
Kalyanaraman சாதாரண திருட்டு வழக்குகளில் எதுவும் தேறாது. கோடிக்கணக்கில் சுருட்டியவர்கள் "நன்கு கவனிப்பார்கள்". அந்த கவனிப்பு மழை குறையும்போதுதான் பிடிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X