பிரதமரே! ஊழலுக்கு எதிரானவர் போல காட்டுவதை நிறுத்துங்கள்: மல்லிகார்ஜூன கார்கே

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (43) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் போல காட்டிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அதானியின் ரூ.20,000 கோடி மதிப்பு உள்ள ஷெல் நிறுவனங்களின் சொந்தக்காரார் யார்? லலித் மோடியா? நீரவ் மோடியா? மெஹூல் சோக்சியா? விஜய் மல்லையாவா?
Stop image makeover by calling yourself anti-corruption crusader: Kharge attacks PM Modiபிரதமரே! ஊழலுக்கு எதிரானவர் போல காட்டுவதை நிறுத்துங்கள்: மல்லிகார்ஜூன கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் போல காட்டிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அதானியின் ரூ.20,000 கோடி மதிப்பு உள்ள ஷெல் நிறுவனங்களின் சொந்தக்காரார் யார்? லலித் மோடியா? நீரவ் மோடியா? மெஹூல் சோக்சியா? விஜய் மல்லையாவா? ஜெடின் மேதாவா? "ஊழல் பிரசாரத்தை விரட்டுவோம் திட்ட" உறுப்பினர்களா? நீங்கள் தான் அந்த கூட்டணியின் தலைவரா? உங்களை நீங்களே 'ஊழலுக்கு எதிரானவர்' போல காட்டிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.


கர்நாடகாவில் உங்கள் அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று குற்றம் சாட்டப்படுவது ஏன்? மேகாலயாவின் நம்பர் ஒன் ஊழல் அரசில் நீங்கள் ஏன் அங்கம் வகிக்கிறீர்கள்?


latest tamil news


ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு ஊழல், மத்திய பிரதேசத்தில் போஷன் ஊழல், சத்தீஸ்கரில் என்.ஏ.என்., ஊழல் ஆகியவற்றில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பில்லையா? 95 சதவீத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு. ஆனால் பா.ஜ.,வில் உள்ள தலைவர்கள் எல்லாம் வாஷிங் மிஷின் மூலம் சுத்தம் செய்யப்பட்டவர்களா?


உங்களுக்கு (பிரதமருக்கு) திராணி இருந்தால், பார்லி., கூட்டுக்குழுவை அமைத்துவிட்டு, 9 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு வெளிப்படையான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துங்கள் பார்ப்போம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

30-மார்-202309:23:20 IST Report Abuse
எவர்கிங் ...அவ்வப்போது காட்டிக் கொள்வதை நிறுத்து.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
29-மார்-202323:39:02 IST Report Abuse
Nagarajan D உண்மையை சொன்னா உமக்கு ஏன் வலிக்குது? அவர் என்ன சோனியா குடும்பம் ஊழலுக்கு மட்டுமே வாழும் குடும்பம் என்றா சொன்னார்.. அவருக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும்... அவரை பற்றி மக்களுக்கும் தெரியும்... உன் கம்பெனி முதலாளி குடும்பம் பற்றியும் நன்றாக தெரியும்... உன் விசுவாசத்தை அந்த குடும்பத்தை பார்த்தால் வால் ஆட்டுவதோடு நிறுத்திக்கொள்... இல்லை என்றால் எலும்பு துண்டு போடுவதை அதுகள் நிறுத்திவிடும்
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
30-மார்-202307:45:03 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM அதானி உலக மிக பணக்காரன் அனைத்து எப்படி எண்பதுகளில் ஒரு சாதாரண தொழிலை செய்தவர் இவர் தாத்தாவோ அல்லது பிர்லோவரோ இல்லை ஒரு கம்பெனி ஐந்து அல்லது அறுவரும் அனுபவம் இருந்தால் தான் காங்ற்றச்ட் கிட்டும் பேங்க் லோன் இருந்தால் தான் காங்ற்றச்ட் வேலை செய்து முடிக்க முடியும் உங்களைப்போல எல்லாம் தெறித்த கண் மூடிகள் இருப்பதால் தான் ஆயிரம் ம்மொடிகள் வந்தாலும் நாடு உருப்படப்போவது இல்லை...
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202321:55:56 IST Report Abuse
Jai இவர் ஒரு டம்மி தலைவர். தற்போது கர்நாடகாவில் எலக்சன் நடப்பதால் இவரை பேச சொல்லி கொஞ்சம் சேர்த்து ஓட்டு கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். இதுவரைக்கும் இவரு எந்த அறிக்கையும் விடவில்லை. கர்நாடக எலக்சன் ஆரம்பித்த உடன் இப்படி ஒரு திடீர் காங்கிரஸ் தலைவரானார், எலக்சன் முடிந்தவுடன் மறுபடியும் டம்மி பீஸ் ஆவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X