''இடம் மாற மாட்டேன்னு அடம் பிடிக்கறார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை சிட்டிக்குள்ள, 15 வருஷத்துக்கு மேல போக்குவரத்து போலீசா இருக்கறவாளை, 'லிஸ்ட்' எடுத்து, அவாளை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு சமீபத்துல மாத்தினா ஓய்...
![]()
|
''கிட்டத்தட்ட, 200க்கும் அதிகமான போலீஸ்காராளை இப்படி மாத்தினா... இதுல, வடசென்னை போக்குவரத்து பிரிவுல இருக்கற அதிகாரி ஒருத்தர் மட்டும், இடம் மாறாம அடம் பிடிக்கறார் ஓய்...
''ஆளுங்கட்சிக்காராளை பிடிச்சு, அதே இடத்துல நீடிக்க முயற்சி பண்ணிண்டு இருக்கார்... இதுக்காக, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செஞ்சிட்டதாகவும் சொல்லிண்டு திரியறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''வாங்கோ சிவா... அந்த சேரை இழுத்து போட்டு உட்காருங்கோ...'' என, நண்பரை வரவேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement