கொடுங்கள்! மகிழ்வீர்கள்!
இந்த மண்ணை விட்டுச் சென்றதும் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது ''மண்ணுலகில் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே... ஆனால் நீ எப்படி செயல்பட்டாய்?'' எனக் கேள்வி கேட்கப்படும்.
''இறைவா! பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே பூமியிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் அங்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன்'' என வருத்தப்படுவான்.
''மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்'' என்று கேள்வி கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாததால் உடனடியாக நரகத்திற்கு தள்ளப்படுவான். பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மம் செய்தால் கூட மறுவுலகில் மகிழ்ச்சியாக வாழலாம். மனிதர்களில் யார் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை தர்மவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது என்கிறது குர்ஆன்.
இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள், 'எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்ன தர்மங்களைச் செய்தேன்' என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில்
தவறான பாதையில் சென்று போலியான சுகங்களைப் பெறுவதை விட, மறுமைக்காக தர்மம் செய்வது நல்லது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement