மே முதல் வாரத்தில் 10ம் வகுப்பு ரிசல்ட்?

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்த பணிகளை, மே, 4க்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர் என, மொத்தம், 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை
Class 10 result in first week of May?  மே முதல் வாரத்தில் 10ம் வகுப்பு ரிசல்ட்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்த பணிகளை, மே, 4க்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர் என, மொத்தம், 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.


இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வு, கடந்த, 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 30 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராதது தெரிய வந்தது. அவர்களை, செய்முறை தேர்வில் பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்காக, செய்முறை தேர்வுக்கு, இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news

அரசு தேர்வுத்துறை, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்.,25ல் துவங்கி, மே, 3 வரை நடக்கும். மதிப்பெண் பட்டியல், மே, 4ல், தேர்வுத்துறையின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்படும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதனால், மே மாதம் முதல் வாரத்திலேயே, 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
30-மார்-202310:14:57 IST Report Abuse
முதல் தமிழன் முதல்ல எப்படி சரியாக விடைத்தாள்களை திருத்திடுவது என்று சொல்லி கொடுக்கவும். எதிர்பாராமல் மோசமாக எழுதிய பலர் நல்ல மதிப்பெண்களையும், நன்று செய்தவர்கள் குறைவான மதிப்பெண்களையும் எடுக்கிறார்கள். நிறைய ஆசிரியர்கள் பணத்துக்காக மட்டுமே செல்கிறார்கள் ....விடைகளை சரி பார்ப்பது இல்லை. பக்கம் நிரம்பி இருந்தால் மதிப்பெண் என்ற நடைமுறை உள்ளது. நம்பக தன்மை இல்லை மதிப்பீடு முறையில் இது இந்நாட்டுடைய கருத்து. மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும், நான் உடன் பட அது உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X