நகை கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி விடுவிப்பு

Added : மார் 30, 2023 | |
Advertisement
சென்னை: தமிழக அரசு, கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்து, அந்தாண்டில் உத்தரவிட்டது.இதற்கான நிபந்தனைகளின் கீழ் தேர்வான, 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில்

சென்னை: தமிழக அரசு, கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்து, அந்தாண்டில் உத்தரவிட்டது.

இதற்கான நிபந்தனைகளின் கீழ் தேர்வான, 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது.

அதன்படி, 2021 - 22ல், 1,215 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வழங்க முடிவானது. அதில், 2022 அக்டோபரில், 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 1,000 கோடி ரூபாயை விடுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X