கோடை விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் படகுகள் பராமரிப்பு

Added : மார் 30, 2023 | |
Advertisement
ஏற்காடு: ஏற்காட்டில் படகுகள் பராமரிப்பு பணி நடக்கிறது.ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை என்பதால், ஏற்காட்டில் கோடை விழா நடக்கும். அதனால், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக, தமிழக சுற்றுலா துறை மூலம் இயங்கும் படகு இல்லம். அங்கு மோட்டார், துடுப்பு படகுகள்,


ஏற்காடு: ஏற்காட்டில் படகுகள் பராமரிப்பு பணி நடக்கிறது.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை என்பதால், ஏற்காட்டில் கோடை விழா நடக்கும். அதனால், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக, தமிழக சுற்றுலா துறை மூலம் இயங்கும் படகு இல்லம். அங்கு மோட்டார், துடுப்பு படகுகள், இருவர், நான்கு பேர், தானாக ஓட்டிச்செல்லும் பெடல் படகுகள் உள்ளன.
கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு கோடை கால தொடக்கத்திலேயே, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா
பயணியரை மகிழ்விக்க, அங்குள்ள படகுகளை சீரமைத்து வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும் படகு இல்ல வளாகத்தில் சிறு வகை
சிற்றுண்டி, குழந்தைகள்
விளையாட ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X