அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: மத்திய அரசு அறிவிப்பு
அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: மத்திய அரசு அறிவிப்பு

அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: மத்திய அரசு அறிவிப்பு

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: அரிய வகை நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், ‛ அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அரிய வகை நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




latest tamil news


அதில், ‛ அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய் என கடந்த 2021ம் ஆண்டில் மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு வரி விலக்கு பொருந்தும். 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஏற்படுகிறது. சிகிச்சை செலவை கருத்தில் கொண்டு, சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும் போது, இந்த முழுவரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.


இதுவரை வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு, சில வரிகளை விதித்திருந்தது, தற்போது முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
31-மார்-202307:24:24 IST Report Abuse
Bye Pass மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெறுவது தேவையில்லாதது.. மருத்துவர் மேல் நம்பிக்கை இல்லையா? வெளிநாட்டு மதுவகைகள் வாங்க எந்த கட்டுப்பாடும் கிடையாது ..
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
30-மார்-202316:50:16 IST Report Abuse
Oru Indiyan மிக சிறந்த செயல். எல்லோரும் வாழ்த்துவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X