ராமநவமி விழா கொண்டாட்டம்: வடமாநிலங்களில் வன்முறை

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
கோல்கட்டா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ராமநவமி விழா கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் பதற்றம் காணப்படுகிறது.மேற்குவங்கம் மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இன்று ராமநவமி விழா கொண்டாட்டம் கோலகலமாக துவங்கியது. அபபோது இரு தரப்பு மோதல் வன்முறையாக உருவெடுத்தது. இந்த வன்முறை சம்பவத்தில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
Ramnavami Festival: Violence in West Bengal, Gujarat  ராமநவமி விழா கொண்டாட்டம்: வடமாநிலங்களில் வன்முறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ராமநவமி விழா கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் பதற்றம் காணப்படுகிறது.


மேற்குவங்கம்


மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இன்று ராமநவமி விழா கொண்டாட்டம் கோலகலமாக துவங்கியது. அபபோது இரு தரப்பு மோதல் வன்முறையாக உருவெடுத்தது.


இந்த வன்முறை சம்பவத்தில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. விழாவில் பங்கேற்ற பா.ஜ.வைச் சேர்ந்த சிலர் வாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் பங்கேற்றதாக கூறப்படுகிறது.


latest tamil news



அரசு பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அமைதி காக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தவன்முறை சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



குஜராத்



இதே போன்று குஜராத் மாநிலம் வதோதராவில் ராம நவமி பண்டிகையினையொட்டி, இன்று யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை பதேபுராவில் உள்ள மசூதி அருகே வந்போது நடந்த இரு தரப்பு மோதல் வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்றுள்ளனர். எனினும் அங்கு பதற்றம் காணப்படுகிறது.



மாகாராஷ்டிரா



மாகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி நகரிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கியும், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202313:27:19 IST Report Abuse
venugopal s ஊர்வலம் போகும்போது கையையும், வாயையும் சும்மா வைத்துக் கொண்டு சென்றால் எந்தப் பிரச்சினையும் வராது!
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
31-மார்-202307:09:09 IST Report Abuse
Dharmavaan சொத்தை சேதப்படுத்துவதும் தீ வைப்பதும் மூர்க்க கூட்டத்தின் வேலை.சுட்டுத்தள்ளி இதை அடக்க வேண்டும்.
Rate this:
Cancel
31-மார்-202306:10:31 IST Report Abuse
அப்புசாமி பல மாநிலங்களில் நடப்பதால் இதுவும்.ஒரு தேர்தல் வியூகமாக இருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X