'ஜாக்டோ - ஜியோ'வுக்கு போட்டியாக புது அமைப்பு

Added : மார் 31, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை,: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்புக்கு போட்டியாக, ஆளும்கட்சி ஆதரவுடன் செயல்பட, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற, புதிய அமைப்பு உருவாகியுள்ளது.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன. அந்த அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால்,
A new system to compete with Jacto-Jio  'ஜாக்டோ - ஜியோ'வுக்கு போட்டியாக புது அமைப்பு

சென்னை,: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்புக்கு போட்டியாக, ஆளும்கட்சி ஆதரவுடன் செயல்பட, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற, புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன. அந்த அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கியும், அவை நிறைவேற்றப்படவில்லை என, ஜாக்டோ - ஜியோ தரப்பில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதற்கு போட்டியாக, தழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

ஜாக்டோ - ஜியோவில் இடம்பெற்ற ஆசிரியர் சங்கங்களில் சிலவற்றை மட்டும் பிரித்து, இந்த கூட்டமைப்பில் சேர்த்துள்ளனர். புதிய கூட்டமைப்பு, தி.மு.க., அரசுக்கு ஆதரவாக செயல்படும் என, கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

r.sundaram - tirunelveli,இந்தியா
31-மார்-202315:04:30 IST Report Abuse
r.sundaram ஜால்ரா போடா ஆள் வேண்டும் பிடித்து விட்டார்கள், செலவு எவ்வளவு என்று தெரிய வில்லை.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
31-மார்-202307:55:01 IST Report Abuse
S.kausalya இதோ vandhuttomille. திமுக வுடய பிரித்தாளும் சூழ்ச்சி வலையில் அரசு அலுவலர் சங்கத்தையும் சேர்த்துட்டோம். முன்பு ஒரே ஒரு சங்கம் இருந்ததை, முக ஜெக்டோ என பிரித்து, அவர்களுக்கு சில சகாயங்கள் செய்து, தாய் சங்கத்தின் மதிப்பை குறைத்தார். Jacto திமுக விசுவாசியாக வாலாட்டி கொண்டு இருந்தது. ஆனால் அரசு அலுவலர்களை பேச்சினால் மட்டும் கவர முடியாது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு கொண்டு வந்து தீர்வு கான வேண்டிய கட்டாயத்தில் jacto உள்ளது. எனவே போராட ஆரம்பித்து உள்ளது. இப்போது தந்தையின் பாணியில், முதல்வரும், jacto வை உடைத்து ஒரு பிரிவை தனக்கு ஜால்ரா போடும் சங்கமாக மாற்றி உள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது திமுக யின் இரத்தத்தில் ஊறி உள்ளது. சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தையே பிரிப்போர் உண்டு.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
31-மார்-202307:06:21 IST Report Abuse
S. Narayanan விடியல் தருவதாக பொய் சொன்ன திமுக அரசு இப்போது வஞ்சகமாக அரசு ஊழியர்களை ஏமாற்ற திட்டம் தீட்டுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X