ரம்ஜான் சிந்தனைகள்-9| Ramadan Thoughts-9 | Dinamalar

ரம்ஜான் சிந்தனைகள்-9

Added : மார் 31, 2023 | கருத்துகள் (2) | |
நல்வாழ்விற்கான வழிமுறைகள் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளைப் பின்பற்றுங்கள். வாழ்வில் நலம் உண்டாகும். * உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.*உலக ஆசை பாவங்களின் வேராகும். அதிகம் ஆசைப்பட்டால் அது உன் வாழ்வை தலைகீழாக்கி விடும்.* கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள்.
Ramadan Thoughts-9   ரம்ஜான் சிந்தனைகள்-9

நல்வாழ்விற்கான வழிமுறைகள்


நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளைப் பின்பற்றுங்கள். வாழ்வில் நலம் உண்டாகும்.
* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.
*உலக ஆசை பாவங்களின் வேராகும். அதிகம் ஆசைப்பட்டால் அது உன் வாழ்வை தலைகீழாக்கி விடும்.
* கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சுவனம் செல்ல விரும்புபவர்கள் வாழ்வில் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.
*மற்றவருக்காக விட்டுக் கொடுப்பவர்கள், பிறரது குற்றம், குறைகளை பொறுப்பவர்கள் இறைவனின் கருணையை பெறுவர்.
*எண்ணம் பரிசுத்தமானதாக இருந்தால் சிறிய நன்மைகள் கூட பெரிய நன்மைகளாக மாறி விடும்.
* பொது இடம், நடைபாதை, மரத்தடிகளில் அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மம்.

*எவர் கடனை ஒழுங்காகத் திருப்பித் தருகிறாரோ அவரே உங்களில் மேலானவர்.


இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி


நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:42 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X