சாலையோரம் பாழடைந்த கிணறு: மூட வலியுறுத்தல்

Added : மார் 31, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், மலையாள தெருவில், உள்ள வீடுகளின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது. அப்பகுதிவாசிகள், 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோக தேவைக்கு கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், மாநகராட்சி சார்பில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் மற்றும் கூடுதல்
Dilapidated roadside well: Urged to close   சாலையோரம் பாழடைந்த  கிணறு: மூட வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், மலையாள தெருவில், உள்ள வீடுகளின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது. அப்பகுதிவாசிகள், 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோக தேவைக்கு கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் மற்றும் கூடுதல் குடிநீர் தேவைக்கு சிறு மின்விசைக் குழாயும் அமைத்துக்கொடுத்ததால், இத்தெரு மக்கள் கிணற்று நீரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்துவதில்லை.

இதனால், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த கிணறு பாழடைந்து, குப்பை கொட்டும் தொட்டியாக மாறியுள்ளது. சாலையோரத்தில் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக,கிணறு திறந்து கிடப்பதால், இவ்வழியாக செல்லும் சிறுவர்கள்,விளையாட்டுத்தனமான கிணற்றை எட்டி பார்க்கும்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, பயன்பாடின்றி உள்ள பாழடைந்த கிணற்றை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X