பொன்னேரிக்கரை- - பரந்துார் சாலையில் மரக்கன்று நடும் பணி துவக்கம்

Added : மார் 31, 2023 | |
Advertisement
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை சாலையில் இருந்து, பரந்துார் கிராமம் வரையில், 8.5 கி.மீ.,துாரம் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும், நிழல் தரும் மரங்கள் அறவே இல்லை என, பசுமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, பொன்னேரிக்கரை - பரந்துார் சாலை இரு புறமும் மரக்கன்றுகள் நடுவதற்கு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். நேற்று
Plantation of saplings started on Ponnerikkarai-Paranthur road   பொன்னேரிக்கரை- - பரந்துார் சாலையில் மரக்கன்று நடும் பணி துவக்கம்

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை சாலையில் இருந்து, பரந்துார் கிராமம் வரையில், 8.5 கி.மீ.,துாரம் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும், நிழல் தரும் மரங்கள் அறவே இல்லை என, பசுமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, பொன்னேரிக்கரை - பரந்துார் சாலை இரு புறமும் மரக்கன்றுகள் நடுவதற்கு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மரக்கன்றுகள் நடும் பணியை, தொழிலாளர்கள் துவக்கியுள்ளனர்.

முதற்கட்டமாக, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல் பொடவூர் கிராமம் வரையில், சாலை ஓரம் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த செடிகளுக்கு ஏற்ப, மூங்கில் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளன.

விரைவில், பரந்துார்- - - பொன்னேரிக்கரை வரை இருபுறமும், சாலை ஓர மரங்கள் நடும் பணி நிறைவு செய்யப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X