தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வி

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், உயிரி தாவரவியல் பாடத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வி இருந்ததால் குழப்பம் அடைந்தனர்.பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று உயிரியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது. வினாத்தாளின் தன்மை குறித்து, முதுநிலை ஆசிரியர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வில்,
Question in English for Tamil medium students   தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், உயிரி தாவரவியல் பாடத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வி இருந்ததால் குழப்பம் அடைந்தனர்.

பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று உயிரியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது. வினாத்தாளின் தன்மை குறித்து, முதுநிலை ஆசிரியர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வில், வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. தினசரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வினாக்களில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள், பொது தேர்வில் இடம் பெற்றன.


latest tamil news


இதன் காரணமாக, அனைத்து பாடங்களையும் படித்த மாணவர்களுக்கு, முழு மதிப்பெண் எடுப்பது மிகவும் எளிது. தேர்ச்சி விகிதமும் இந்த பாடத்தில் அதிகரிக்கும். இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், உயிரி தாவரவியலில் 2 மதிப்பெண் கேள்விகளுக்கான பிரிவில், ஒளிச்சேர்க்கை சார் செயலாக்க கதிர்வீச்சு என்றால் என்ன என்ற கேள்விக்கு, அதன் ஆங்கில வழி சுருக்கமான பி.ஏ.ஆர்., என்றால் என்ன என ஆங்கிலத்தில் கேள்வி இடம் பெற்றது.

தமிழ் வழி மாணவர்கள் கேள்வி என்னவென்றே புரியாமல், பதில் எழுதாமல் விட்டுள்ளனர். தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் இடம் பெற்ற கேள்விக்கு, 2 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

01-ஏப்-202310:58:23 IST Report Abuse
அப்புசாமி தமிழ்ல கேட்டாலே பதில் தெரியாது.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
01-ஏப்-202309:00:24 IST Report Abuse
Rajarajan திராவிட ஆட்சிக்கும் , படிப்புக்கும் தான் காத தூரம் ஆயிற்றே. பின்னர் ஏன் கல்வித்துறையை இன்னும் தமிழக அரசு தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும். மத்திய அரசிடம் கொடுத்து, அவர்களே பாரபட்சம் இன்றி, தரமான ஆசிரியர், பாடத்திட்டம், பயிற்றுவிப்பு போன்றவற்றை நடத்த அனுமதி தரவேண்டும்.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை மொத்தமா எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் அளித்து திராவிட சாதனை படைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X