'நாட்டில் சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது'

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை : ''நாட்டில் சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது,'' என, அகில இந்திய காங்., பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் கூறினார்.சென்னை சத்தியமூர்த்திபவனில், அவரது பேட்டி:அதானியை காப்பாற்றும் முயற்சியாக, பார்லிமென்டை பா.ஜ., முடக்கி உள்ளது. ஒன்றுப்பட்ட எதிர்கட்சிகள், கூட்டு பார்லிமென்ட் குழு விசாரணை கோரியதை, ஆளும் பா.ஜ., கண்டு கொள்ளவில்லை.'மோடி என்ற ஜாதிப் பெயர் கொண்டவர்கள்
We have to fight for free speech in the country   'நாட்டில் சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ''நாட்டில் சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது,'' என, அகில இந்திய காங்., பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில், அவரது பேட்டி:

அதானியை காப்பாற்றும் முயற்சியாக, பார்லிமென்டை பா.ஜ., முடக்கி உள்ளது. ஒன்றுப்பட்ட எதிர்கட்சிகள், கூட்டு பார்லிமென்ட் குழு விசாரணை கோரியதை, ஆளும் பா.ஜ., கண்டு கொள்ளவில்லை.

'மோடி என்ற ஜாதிப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள்' என, ராகுல் சொல்லவில்லை. இதில், எந்த ஜாதியையும் குறிவைத்து பேசவில்லை. எம்.பி., பதவி தகுதி நீக்கம், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை குறித்து, ராகுலோ, காங்கிரசோ பயந்துவிடப் போவதில்லை. இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, மக்களை சந்தித்தோம். அப்போது விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளை அறிந்தோம். மக்கள் பிரச்னைகளை தொடர்ந்து எழுப்புவோம்..


latest tamil news


காந்தி, நேரு, நேதாஜி போன்றவர்களை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் கூறி, ஆங்கிலேய அரசு சிறைத்தண்டனை வழங்கியது. அப்படிப்பட்ட ஆங்கில அரசை, காங்கிரஸ் வென்றெடுத்தது. ஆங்கிலேயரிடம் இருந்து, சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியிருக்கிறது.

முறைகேடு செய்தவர்களை அம்பலப்படுத்திய ராகுலை, பா.ஜ., அரசு குறிவைக்கிறது. இதை, காங்கிரஸ் முறியடித்து வெற்றி பெறும்.
இவ்வாறு, முகுல்வாஸ்னிக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (59)

Narayanan - chennai,இந்தியா
05-ஏப்-202313:50:25 IST Report Abuse
Narayanan இது சுதந்திர நாடகத் தெரியவில்லை . மனிதன் சம்பாதிக்கும் பணத்தில் நேர்முகம் / மறைமுகம் ஆக வரியை வசூல் செய்கிறார்கள் .
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
01-ஏப்-202321:16:36 IST Report Abuse
K.n. Dhasarathan சுதந்திரம் இல்லை, மன்னர் ஆட்சி நடக்கிறது, ம் என்றால் சிறை வாசம், ஏன் என்றால் வன வாசம், பிரதமர் என்ன படித்திருக்கிறார் என்றால் அதற்கு 25000 ரூபாய் அபராதம், என்ன நீதி ? யாரும் யாரையும் கேட்கிற கேள்விதான், அதில் என்ன ஆராச்சி பண்ணி , குற்றம் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை. அந்த நீதிபதிக்கே வெளிச்சம்.
Rate this:
thamizhan - Bangalore,இந்தியா
05-ஏப்-202307:28:00 IST Report Abuse
thamizhanஉண்மை . மோடி என்பவரின் கல்வித்தகுதியை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக பார்த்து தீர்ப்பு அளித்திருக்க வேண்டும் . MODI ஒன்றும் சுத்த தங்கம் இல்லை .. தனக்கு திருமணம் ஆகவில்லை என பொய் கூறினார் . மக்களும் அவர் உத்தமர் என நம்புவது வேதனை...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
01-ஏப்-202320:18:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN நீங்கள் இப்படி பேசுவது சுதந்திரம் உள்ளதால் தான் பேச முடிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X