''நிழல் அமைச்சராவே வலம் வரார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க.,வுல, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய ரெண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலரும், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலரும் இருக்கா...
''இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரின் வலதுகரமா இருக்கற மாவட்டச் செயலர், நாலு தொகுதி உட்படஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன், 'கன்ட்ரோல்'ல கொண்டு வந்துட்டார் ஓய்...
![]()
|
''அவரது ஆதரவு இருக்கறவாளுக்கு மட்டும் தான், 'டெண்டரை' ஒதுக்கறா... எந்த துறை அதிகாரியா இருந்தாலும், அமைச்சர் தோரணையில கெத்தா பேசி, காரியத்தை முடிச்சுக்கறார் ஓய்...
''சில அதிகாரிகள், அவரது போன் கால் வந்தாலே, 'சீட்'ல இருந்து எழுந்து நின்னு தான் பேசறான்னா பாருங்க... அந்த அளவுக்கு, அவரது அதிகாரம் கொடி கட்டி பறக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''கள்ளக்குறிச்சியில அவருக்கு தான், 'வசந்த'காலம்னு சொல்லும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.