சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில், இன்று(ஏப்ரல் 01) 5% -10% வரை சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னையில் வானகரம் சூரப்பட்டு நல்லுார் மாத்துார் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் வாகன வாடகை ஆம்னி பஸ் கட்டணங்கள் உயரும் வாய்ப்புள்ளது.தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 54 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டண வசூல் நடந்து வருகிறது.