திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 22. இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம், 29ம் தேதி பள்ளிக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து, அவரது தந்தை நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன அவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement