சென்னை : தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்தறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 97 பேர் குணம் அடைந்து உள்ளனர். 836 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 43 பேரும் செங்கல்பட்டு-15, கோவையில் 14 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டு உள்ளது.