பாம்புபிடி வீரர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் எல்.முருகன்

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, பாம்பு பிடி வீரர்களை, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன் பாராட்டினார். இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, பாம்புபிடி வீரர்களான, மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோருக்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்கள்

சென்னை : இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, பாம்பு பிடி வீரர்களை, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன் பாராட்டினார்.



latest tamil news


இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, பாம்புபிடி வீரர்களான, மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோருக்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இருவரையும், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன், இன்று (ஏப்.,1)ம் தேதி நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தனது, சமூக வலைதளபக்கத்தில் முருகன் பதிவிட்டிருப்பதாவது :


அமெரிக்காவுக்கு சென்று, அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்து, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த, மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோர், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.



latest tamil news

இருவரையும், நேரில் சந்தித்தேன். அப்போது, இருவரும் அவர்களின், அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள், இருவரும் மேலும், பல உயரங்களை அடைய வாழ்த்தினேன். பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்காக, இருவரின் குடும்பத்தினரும், பிரதமர் மோடிக்கு, நன்றியை தெரிவித்தனர்.


இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-ஏப்-202322:00:54 IST Report Abuse
Ramesh Sargam விஷம் உள்ள பாம்புகளைக்கூட பிடித்துவிடலாம், ஆபத்து எதுவும் இல்லாமல். ஆனால், பாம்புகளை விட கொடிய விஷம் உள்ள ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பிடிப்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X