இந்தியா - இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : ''இந்தியா - இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்'' என மாநில நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:* மாநில நெடுஞ்சாலைகளில் மூன்று இடங்களில் வாகன நிறுத்தம் டிரைவர்கள் ஓய்வறை உணவகம் முதலுதவி மையம் எரிபொருள் நிலையம் பழுது
Passenger shipping between India and Sri Lanka   இந்தியா - இலங்கை இடையே  பயணியர் கப்பல் போக்குவரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''இந்தியா - இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்'' என மாநில நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.


நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:* மாநில நெடுஞ்சாலைகளில் மூன்று இடங்களில் வாகன நிறுத்தம் டிரைவர்கள் ஓய்வறை உணவகம் முதலுதவி மையம் எரிபொருள் நிலையம் பழுது பார்ப்பு மையம் உள்ளிட்ட சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும்.


latest tamil news

* ஆறுவழி சாலைகள் எக்ஸ்பிரஸ் சாலைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல் தாமதமின்றி முடிவுகள் எடுக்க மாநில நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் உருவாக்கப்படும்.


* மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் 24 மணி நேரத்திலும்; மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணிநேரத்தில் சரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த அலைபேசி செயலி உருவாக்கப்படும்.


* கொண்டை ஊசி வளைவு மற்றும் ஆபத்தான வளைவுகளில் வெளிநாட்டு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும்.


* விருதுநகர் - சிவகாசி முதலிய இடங்களில் 238 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.


* இந்தியா - இலங்கை இடையே ராமேஸ்வரம் - தலைமன்னார் ராமேஸ்வரம் - காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


இவ்வாறு அமைச்சர் வேலு அறிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Duruvesan - Dharmapuri,இந்தியா
02-ஏப்-202314:16:40 IST Report Abuse
Duruvesan அப்போ சாலை வேண்டாம் போ, ஒன்றிய அரசு ஒயிகண்ணு கூவினது எல்லாம் சும்மா கண்டியா விடியல் 🥹?
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
02-ஏப்-202310:55:15 IST Report Abuse
Ganesh Shetty ஏற்கனவே மத்திய அரசு காரைக்கால் மார்க் துறைமுகத்தில் இருந்து வாரம் ஒரு முறை இயக்கப்படும் என்று இதில் பயணியர் நூறு கிலோ வரை பொருட்கள் எடுத்து செல்லலாம் என்று.இந்நிலையில் இது தேவைதானா ???
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-202306:47:02 IST Report Abuse
Kasimani Baskaran பிரமாதமான லேபல்... பஸ்களைக்கூட ஓட்ட துப்பில்லாத தமிழக அரசு என்று கடலில் கப்பல் விட ஆரம்பித்தது?
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
02-ஏப்-202312:10:59 IST Report Abuse
Pandi MuniT.R. பாலு கிட்ட கிடக்குற துரு புடிச்ச கப்பலுகள என்ன செய்யலாமுன்னு யோசிச்சிரிப்பானுக. காசு பாக்க இவனுங்களுக்கா தெரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X